வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க இன்றும் நாளையும்  சிறப்பு முகாம்

திருச்சி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க சிறப்பு முகாம் சனி,  ஞாயிற்றுக்கிழமை நடைபெற

திருச்சி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க சிறப்பு முகாம் சனி,  ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருப்பதாக ஆட்சியர் சு.சிவராசு வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மக்களவைத் தேர்தலை கருத்தில் கொண்டு விடுபட்ட வாக்காளர்களின் பெயர்களைச் சேர்க்க சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது.
முகாம் தவிர இதர வேலைநாட்களில் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்களிடம் உரிய படிவத்தில் விண்ணப்பங்களை அளிக்கலாம்.திருச்சி மாநகராட்சிக்கு உள்பட்டவர்கள் மாநகராட்சி ஆணையர் அலுவலகத்திலும்,கோட்ட அலுவலகங்களிலும் விண்ணப்பிக்கலாம். வாக்காளர் பட்டியலில் மாற்றுத்திறனாளிகளின் பெயர்கள் இல்லாமல் இருந்தால் தங்கள் பெயரை சேர்க்க சிறப்பு முகாமை பயன்படுத்திக் கொள்ளலாம்.
வாக்காளர் பட்டியலில் ஏற்கனவே இடம் பெற்றுள்ள மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் வாயிலாகவோ,சிறப்பு முகாம் வாயிலாகவோ தங்கள் பெயர் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை எண் குறித்த விபரங்களைத் தெரிவிக்கும்படியும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்  என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com