திருச்சியில் ஜனவரி 17ஆம் தேதி நடைபெறவுள்ள எம்ஜிஆர் பிறந்ததின விழாவில் பங்கேற்க அதிமுகவினருக்கு அக்கட்சியின் மாநகர் மாவட்ட செயலரும், மக்களவை உறுப்பினருமான ப. குமார் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: திருச்சி மாநகர அதிமுக சார்பில் ஜனவரி 17ஆம் தேதி எம்ஜிஆர் பிறந்ததினத்தையொட்டி அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படவுள்ளது. இந்நிகழ்ச்சியில் கட்சியின் அனைத்து அணிகளையும் சேர்ந்த நிர்வாகிகள்,தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.