தனியார் பேருந்து மோதியதில் மூதாட்டி சாவு

திருச்சியில் தனியார் பேருந்து மோதியதில் மூதாட்டி சனிக்கிழமை உயிரிழந்தார்.


திருச்சியில் தனியார் பேருந்து மோதியதில் மூதாட்டி சனிக்கிழமை உயிரிழந்தார்.
திருச்சி செந்தண்ணீர்புரம் முத்துமணி டவுன் பகுதியைச் சேர்ந்தவர் சந்தானம் மனைவி தனமேரி (69). இவர், தனது மகன் சந்தானத்துடன் வெள்ளிக்கிழமை பிற்பகல் இரு சக்கர வாகனத்தில் சென்றார். தலைமை அஞ்சலக ரவுன்டானா பகுதியில் சென்ற போது, பின்னால் சென்ற தனியார் பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில், பேருந்து சக்கரம் தனமேரி மீது ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். திருச்சி போக்குவரத்துப் புலனாய்வு தெற்கு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com