பெரிய அணைக்கரைப்பட்டியில் இன்று ஜல்லிக்கட்டு

திருச்சி மாவட்டம், பெரிய அணைக்கரைப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை ஜல்லிக்கட்டு நடைபெற உள்ள நிலையில், அங்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் சார்


திருச்சி மாவட்டம், பெரிய அணைக்கரைப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை ஜல்லிக்கட்டு நடைபெற உள்ள நிலையில், அங்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் சார் ஆட்சியர் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.
வையம்பட்டி ஒன்றியம், முகவனூர் ஊராட்சிக்குள்பட்ட இந்த கிராமத்தில் அந்தோனியார் பொங்கலை முன்னிட்டு புனித செபஸ்தியார் ஆலயத் திடலில் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்புப் பணிகள் குறித்து ஸ்ரீரங்கம் சார் ஆட்சியர் சிபி. ஆதித்யா செந்தில்குமார், மணப்பாறை டி.எஸ்.பி. ஷர்மு, வட்டாட்சியர் சித்ரா, காவல் ஆய்வாளர் அனுஷ்கா மனோகரி உள்ளிட்டோர் வாடிவாசல் பகுதியை சனிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஜல்லிக்கட்டில் 600 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்க உள்ளதாக விழாக் குழுவினர் தெரிவித்தனர்.
கருங்குளம் ஜல்லிக்கட்டு : வையம்பட்டி ஒன்றியம், கருங்குளத்தில் ஜன.27 ஆம் தேதி நடைபெற உள்ள ஜல்லிக்கட்டுக்காக, வரும் 24,25 தேதிகளில் காளைகளுக்கான அனுமதிச் சீட்டு வழங்கப்படும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது. கருங்குளம் புனித இஞ்ஞாசியார் ஆலயத் திடலில் ஜல்லிக்கட்டு நடைபெறஉள்ளது. காளைகளைப் பதிவு செய்ய வருபவர்கள் விழாக் குழுவினர் அறிவித்துள்ள ஆவணங்கள், மருத்துவ அறிக்கை, ஆதார் அடையாள அட்டை நகல், காளைகளின் புகைப்படம் போன்றவற்றை கொண்டு வர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com