மாயமான கட்டடத் தொழிலாளி வெட்டுக் காயங்களுடன் மர்மச் சாவு

திருவெறும்பூர் வட் டம், பனையக்குறிச்சி மாரியம்மன்கோயில் தெரு பன்னீர்செல்வம் மகன் ரதீஷ் (35) .  கட்டடத் தொழிலாளியான

திருவெறும்பூர் வட் டம், பனையக்குறிச்சி மாரியம்மன்கோயில் தெரு பன்னீர்செல்வம் மகன் ரதீஷ் (35) .  கட்டடத் தொழிலாளியான இவருக்கு, மனைவி கீர்த்தனா, மகன்கள் காமேஷ், நாகாத் உள்ளனர்.சனிக்கிழமை நள்ளிரவு 1 மணிக்கு வெளியே சென்று வருவதாகக் கூறி வீட்டிலிருந்து சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. ஞாயிற்றுக்கிழமை காலை பனையக்குறிச்சி நியாயவிலைக்கடை- அங்கன்வாடி மையத்துக்கு இடையிலுள்ள சந்தில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரதீஷ் சடலமாகக் கிடந்தார்.  தகவலறிந்த திருவெறும்பூர் போலீஸார், ரதீஷின் உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  சடலம் அருகே கிடந்த மதுபாட்டிலையும் போலீஸார் கைப்பற்றி விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com