திருவெறும்பூர் வட் டம், பனையக்குறிச்சி மாரியம்மன்கோயில் தெரு பன்னீர்செல்வம் மகன் ரதீஷ் (35) . கட்டடத் தொழிலாளியான இவருக்கு, மனைவி கீர்த்தனா, மகன்கள் காமேஷ், நாகாத் உள்ளனர்.சனிக்கிழமை நள்ளிரவு 1 மணிக்கு வெளியே சென்று வருவதாகக் கூறி வீட்டிலிருந்து சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. ஞாயிற்றுக்கிழமை காலை பனையக்குறிச்சி நியாயவிலைக்கடை- அங்கன்வாடி மையத்துக்கு இடையிலுள்ள சந்தில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரதீஷ் சடலமாகக் கிடந்தார். தகவலறிந்த திருவெறும்பூர் போலீஸார், ரதீஷின் உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சடலம் அருகே கிடந்த மதுபாட்டிலையும் போலீஸார் கைப்பற்றி விசாரிக்கின்றனர்.