பாரதியார் பிறந்த நாள் விழா

பண்ணுருட்டி செந்தமிழ்ச் சங்கம் சார்பில், மகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்த நாள் விழா மற்றும் சங்கத்தின் 78-ஆவது மாத அமர்வுக் கூட்டம், பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.

பண்ணுருட்டி செந்தமிழ்ச் சங்கம் சார்பில், மகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்த நாள் விழா மற்றும் சங்கத்தின் 78-ஆவது மாத அமர்வுக் கூட்டம், பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது. சங்கத்தின் கௌரவத் தலைவர் ப.ச.வைரக்கண்ணு தலை மை வகித்தார். ஆலோசகர் அசோக் ராஜ் முன்னிலை வகித்தார். தலைவர் சுந்தர.பழனியப்பன் வரவேற்றார். கூட்டத்தில் பாரதியைப் போற்றுவோம் என்ற தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது. இதில் பலர் பங்கேற்று மகாகவியை பாராட்டி கவிதை வாசித்தனர். பாரதியும் தமிழும் என்ற தலைப்பில் செயலர் சொ.முத்துக்குமார் சிறப்புரையாற்றினார். முன்னதாக, பள்ளி வளாகத்தில் உள்ள பாரதியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com