மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக இளைஞர் தற்கொலை செய்து கொண்டார்.
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சண்முகா நகரைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் மகன் உமாசங்கர் (31). இவருக்கும், ஸ்ரீமதிக்கும் திருமணமாகி ஆண் குழந்தை ஒன்றும், பெண் குழந்தை ஒன்றும் உள்ளது.
இந்த நிலையில், கடந்த 2 நாள்களுக்கு முன்பு தம்பதியிடையே தகராறு ஏற்பட்டதாம். இதனால், ஸ்ரீமதி பக்கத்துத் தெருவில் உள்ள தாய் வீட்டுக்குச் சென்று விட்டாராம். இதனால் மனமுடைந்து உமாசங்கர் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் மின் விசிறியில் சேலையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில், திருப்பாதிரிப்புலியூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.