கடலூர்

மணல் குவாரி அமைக்கக் கோரி மாட்டு வண்டித் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

DIN

பண்ருட்டி வட்டத்தில் மாட்டு வண்டிகளுக்கான மணல் குவாரியை அமைக்க வலியுறுத்தி, மாட்டு வண்டித் தொழிலாளர்கள் சங்கத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
 பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆர்.வி.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் வி.திருமுருகன் முன்னிலை வகித்தார். சிஐடியு மாவட்ட பொதுச் செயலர் கருப்பையன் போராட்டம் குறித்து விளக்கவுரை நிகழ்த்தினார். சிஐடியு மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஆர்.உத்தராபதி, ரங்கநாதன், மாட்டு வண்டி தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் பொன்னம்பலம், சுந்தரமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொணடனர்.
 ஆர்ப்பாட்டத்தில், பண்ருட்டி வட்டத்தில் மாட்டு வண்டிகளுக்கான அரசு மணல் குவாரி அமைக்கப்பட வேண்டும், மாட்டு வண்டித் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமரின் வாகனப் பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரம்: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மகளுக்கு பெயர் சூட்டினார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT