பண்ருட்டி வட்டத்தில் மாட்டு வண்டிகளுக்கான மணல் குவாரியை அமைக்க வலியுறுத்தி, மாட்டு வண்டித் தொழிலாளர்கள் சங்கத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆர்.வி.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் வி.திருமுருகன் முன்னிலை வகித்தார். சிஐடியு மாவட்ட பொதுச் செயலர் கருப்பையன் போராட்டம் குறித்து விளக்கவுரை நிகழ்த்தினார். சிஐடியு மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஆர்.உத்தராபதி, ரங்கநாதன், மாட்டு வண்டி தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் பொன்னம்பலம், சுந்தரமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொணடனர்.
ஆர்ப்பாட்டத்தில், பண்ருட்டி வட்டத்தில் மாட்டு வண்டிகளுக்கான அரசு மணல் குவாரி அமைக்கப்பட வேண்டும், மாட்டு வண்டித் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனர்.