பள்ளிகளில் குழந்தைகள் தின விழா

கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் குழந்தைகள் தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் குழந்தைகள் தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
இந்தியாவின் முதல் பிரதமரான ஜவாஹர்லால் நேருவின் பிறந்த நாள் விழா குழந்தைகள் தின விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, புதன்கிழமை மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளிலும் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. விருத்தாசலத்திலுள்ள ஜெயப்பிரியா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், தாளாளர் சி.ஆர்.ஜெயசங்கர் தலைமையில் விழா நடைபெற்றது. பள்ளி முதல்வர் ஏ.முருகன் முன்னிலை வகித்து சிறப்புரை ஆற்றினார். துணை முதல்வர் ராஜகயல்விழி நேரு பற்றி உரையாற்றினார்.  
கடலூர் மாவட்ட பாரதிதாசன் இலக்கிய மன்றம் சார்பில் கடலூர் நகராட்சி  நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் கீதா தலைமை வகித்தார். ஆசிரியர் வினயா வரவேற்றார். எழுத்தாளர் தில்லை ராஜேந்திரன், நேரு உருவப் படத்துக்கு மலரஞ்சலி செலுத்தி வாழ்த்துரை வழங்கினார். மன்றத் தலைவர் கவிஞர் கடல்.நாகராஜன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி சிறப்புரையாற்றினார். 
சிதம்பரம்: சிதம்பரம் வீனஸ் குழுமப் பள்ளிகள் சார்பில் குழந்தைகள் தின விழா புதன்கிழமை  நடைபெற்றது. 
 பள்ளித் தாளாளர் வீனஸ் எஸ்.குமார் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் ரூபியாள்ராணி தலைமை வகித்தார். விழாவில் நேரு உருவப் படத்துக்கு பள்ளிக் கல்வி அலுவலர் ஜி.மகேஷ்சுந்தர், ஆசிரியர்கள் இந்திராகாந்தி, கலாதரன் மற்றும் மாணவ பிரதிநிதிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கலைநிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. ஆசிரியை பாண்டிதேவி நன்றி கூறினார்.
 சிதம்பரம் ராமகிருஷ்ணா வித்தியாசாலா தொடக்கப் பள்ளியில், காஸ்மோபாலிட்டன் அரிமா சங்கத் தலைவர் எம்.ராஜசேகர் தலைமையில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது. தலைமை ஆசிரியை எஸ்.அமுதவாணி முன்னிலை வகித்தார். ஆசிரியை வி.சாயிபிரியா வரவேற்றார். அரிமா மாவட்டத் தலைவர் லலித்மேத்தா கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார். அரிமா சங்கச் செயலர் சங்கர் நன்றி கூறினார்.
வடலூர்: வடலூர் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவுக்கு, ஓபிஆர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் ரா.செல்வராஜ் தலைமை வகித்து, நேரு உருவப் படத்துக் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில், பள்ளி தலைமையாசிரியர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com