வணிக நிறுவனங்கள்: தமிழில் பெயர்ப் பலகை அமைக்க ஆட்சியர் அறிவுறுத்தல்

வணிக நிறுவனங்களில் தமிழிலேயே பெயர்ப் பலகை அமைக்கப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் அறிவுறுத்தினார். 

வணிக நிறுவனங்களில் தமிழிலேயே பெயர்ப் பலகை அமைக்கப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் அறிவுறுத்தினார். 
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கடலர் மாவட்டத்திலுள்ள கடைகள், தொழில்சாலைகள், உணவகங்கள் உள்ளிட்ட அனைத்து வகையிலான வணிக நிறுவனங்களின், பெயர்ப் பலகைகளில் நிறுவனத்தின் பெயர் கட்டாயமாக முதலில் தமிழிலும் அதற்கடுத்து தேவைப்பட்டால் ஆங்கிலம் மற்றும் பிறமொழிகளிலும் இடம் பெறுமாறு அமைத்திடுதல் வேண்டும்.  
மேலும் எழுத்துக்களின் அளவு தமிழ், ஆங்கிலம், பிறமொழி ஆகியவை முறையே 5:3:2 என்ற விகிதத்தில் அமைதல் வேண்டும். 
தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டும் பயன்படுத்தும் நேர்வில் முறையே 5:3 என்ற விகிதத்தில் அமைதல் வேண்டும்.  
இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அரசாணையை செயல்படுத்துவதற்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையும்  ஆணையிட்டுள்ளது.
 எனவே, வணிக நிறுவனங்களில் பெயர்ப் பலகைகளை அமைத்திடுவதற்கு, கடலூர் மாவட்டத்திலுள்ள கடைகள், தொழில்சாலைகள், உணவகங்கள் உள்ளிட்ட அனைத்து வகை வணிக நிறுவனங்களும் நடவடிக்கை மேற்கொள்ளுதல் வேண்டும். 
பெயர்ப் பலகைகள் உரிய முறையில் உள்ளனவா? என தமிழ் வளர்ச்சித் துறை அலுவலர்கள், தொழிலாளர் நலத் துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்வார்கள். 
விதிமுறைப்படி பெயர்ப் பலகை அமைத்திடாத நிறுவனங்களுக்குத் தண்டத்தொகை விதிக்கப்பெறும்.  எனவே, தமிழ் வளர்ச்சிக்கு அரசின் பங்களிப்பு மட்டுமின்றி, வணிகர்களும் தங்களின் பங்களிப்பை அளிக்கும் விதமாக உடனடியாக பெயர்ப் பலகைகளை தமிழில் அமைத்திட, கடலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வணிக நிறுவனங்களும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஆட்சியர் அதில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com