கடலூர் தெற்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் சிதம்பரத்தில்காந்தி சிலை அருகே ஞாயிற்றுக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காதல் திருமணம் செய்துகொண்ட கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சுவாதி - நந்தீஷ் ஆகியோரது படுகொலையைக் கண்டித்தும், இதுகுறித்து காவல் துறை உரிய நடவடிக்கை எடுத்து, சம்பவத்தில் தொடர்புடையோரை கைது செய்ய வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்டச் செயலர் பால.அறவாழி தலைமை வகித்தார். செய்தி தொடர்பாளர் பெரு.திருவரசு முன்னிலை வகித்தார். கட்சி
நிர்வாகிகள் செல்வமணி, கோவி.பாவாணன், குறிஞ்சிவளவன், ஆதிமூலம், கமல்ராசு, இளம்வழுதி, ராஜேஷ், வெற்றிவேந்தன், இன்பவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.