விருத்தாசலம் அரசுக் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் கூட்டம்

விருத்தாசலம் திரு.கொளஞ்சியப்பர் அரசுக் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் ஆலோசனைக் கூட்டம் கல்லூரி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.வழக்குரைஞர் பூமாலை.


விருத்தாசலம் திரு.கொளஞ்சியப்பர் அரசுக் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் ஆலோசனைக் கூட்டம் கல்லூரி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வழக்குரைஞர் பூமாலை.
குமாரசாமி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவர்களின் அமைப்பை தொடங்குவது, துறை வாரியாக நிர்வாகக் குழு அமைத்தல், துறை வாரியாக முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதையடுத்து,
திரு.கொளஞ்சியப்பர் அரசு கல்லூரி முன்னாள் மாணவர்கள் கூட்டமைப்பு என்ற பெயரில் புதிய அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்புக்கு சிறப்பு தலைவராக பூமாலை.குமாரசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கூட்டமைப்பின் தலைவராக எழுத்தாளர் சுந்தர பாண்டியன், துணைத் தலைவராக புஷ்பதேவன், செயலராக கரு.காசிவிசுவநாதன், இணைச் செயலராக ஜெயப்பிரகாஷ், துணைச் செயலர்களாக செல்வி, செல்வமணி, பொருளாளராக ஜாகிர்உசேன் ஆகியோரும், நிர்வாகக் குழு உறுப்பினர்களாக ஜெமினி ரங்கப்பிள்ளை, வேப்பூர் ரவி, கே.ஆர்.விஸ்வநாதன், அப்துல்லா, மாய.மணிகண்டன், குபேரமணி, குமரகுரு மற்றும் செல்லதுரை, சிம்லாசங்கர், மணிமாறன், கணேஷ்குமார் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com