ஊரகத் திறனாய்வுத் தேர்வு செப்டம்பர் 23 -ஆம் தேதி கடலூர் மாவட்டத்தில் நடைபெறுகிறது.
இதுகுறித்து அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஊரகத் திறனாய்வுத் தேர்வு காலை 10 மணி முதல் பகல் 12.30 மணி வரை நடைபெறும். தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தேர்வுக்கூடநுழைவுச் சீட்டை அந்தந்தப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் பதிவிறக்கம் செய்து, அவர்களின் கையொப்பத்துடன் பெற்றுக் கொள்ள வேண்டும். தேர்வர்கள் விடைகளை ஓ.எம்.ஆர். தாளில் கருப்பு மை பேனாவினால் மட்டுமே குறிக்க வேண்டும் என அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.