கலங்கரை விளக்கு தினம் வெள்ளிக்கிழமை (செப். 21) கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, அங்கு இலவசமாகப் பார்வையிடாலம்.
இதுகுறித்து கலங்கரை விளக்க அலுவலர் வி.மதனகோபால் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூர் மாவட்டத்தில் பரங்கிப்பேட்டை அன்னங்கோவிலில் கலங்கரை விளக்கு செயல்பட்டு வருகிறது. இதன் 91- ஆவது தினம் வரும் செப்டம்பர் 21 -ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, காலை 9 மணிக்கு துறை சார்ந்த கொடியேற்றத்துடன் விழா நடைபெறுகிறது. தொடர்ந்து, பகல் 12 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்கள் கலங்கரை விளக்கத்தை இலவசமாகப் பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.