என்எல்சி சுரங்கத்தில் பணியிலிருந்த ஒப்பந்தத் தொழிலாளி நெஞ்சுவலியால் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
நெய்வேலி, ஓடைதாண்டவன்குப்பம், காமராஜ் நகரைச் சேர்ந்த வெங்கடேசன் மகன் வேல்முருகன்(33). என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சுரங்கம் 1ஏ -இல் ஒப்பந்தத் தொழிலாளியாகப் பணிபுரிந்து வந்தார். இவர் வெள்ளிக்கிழமை வழக்கம்போல பணிக்கு சென்றார். பணியின்போது இவருக்கு
நெஞ்சுவலி ஏற்பட்டதாம். இதையடுத்து, வடலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இருப்பினும் சிறிது நேரத்தில் வேல்முருகன் உயிரிழந்தார்.