பண்ருட்டி அருகே பெண்ணிடம் நகை பறித்ததாக சென்னை இளைஞர்கள் இருவரை போலீஸmர் கைது செய்தனர்.
பண்ருட்டி ஒன்றியம், என்.எல்.புரத்தைச் சேர்ந்த சிவசங்கரன் மனைவி நந்தினி (30). இவர் வியாழக்கிழமை மதியம் எல்.என்.புரம் பேருந்து நிறுத்தம் அருகே நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக பைக்கில் வந்த இளைஞர்கள் இருவர், நந்தினி அணிந்திருந்த 5 பவுன் தங்க நகை, அவரது செல்லிடப்பேசியை பறித்துக்கொண்டு தப்ப முயன்றனர். அவர்களை அந்தப் பகுதியினர் பிடித்து பண்ருட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அவர்களிடம் போலீஸmர் நடத்திய விசாரணையில், சென்னை வியாசர்பாடி, மல்லிகைப் பூ காலனி 5-ஆவது குறுக்குத் தெருவைச் சேர்ந்த முனியாண்டி மகன் அருண்குமார் (22), 3-ஆவது குறுக்குத் தெருவைச் சேர்ந்த ஜெயகாந்தன் மகன் நவீன்குமார் (20) எனத் தெரியவந்தது.
மேலும், அருண்குமாரின் அத்தை பண்ருட்டி பாரதி நகரில் வசிப்பதும், இவரது வீட்டில் இளைஞர்கள் இருவரும் தங்கியிருந்ததும், மேலும் இவர்கள் பயன்படுத்திய பைக் சென்னையில் திருடப்பட்டது என்பதும் விசாரணையில் தெரிய வந்ததாம். நகை, செல்லிடப்பேசியை பறிமுதல் செய்த போலீஸmர், இருவரையும் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி
வருகின்றனர்.