பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து, சிதம்பரம் காந்தி சிலை அருகே சிஐடியூ ஆட்டோ சங்கத்தினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் சிதம்பரம் வட்டாரத் தலைவர் வெங்கடேசன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் பாபு, மாவட்ட தலைவர் முத்து உள்ளிட்டோர் கலந்துகொண்டு, பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்குக் காரணமாக மத்திய, மாநில அரசுகளை கண்டிப்பதாகக் கூறியும், சென்னையில் பாஜகவினரால் ஆட்டோ ஓட்டுநர் தாக்கப்பட்டதைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.