கடலூர் மாவட்ட கூடைப்பந்துக் கழகம் சார்பில் 13 வயதுக்கு உள்பட்டோருக்கான மாவட்ட கூடைப் பந்து அணிக்கு சிறுவர், சிறுமிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்தத் தேர்வுப் போட்டிகள் வருகிற 30-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணிக்கு கடலூரில் உள்ள அண்ணா விளையாட்டரங்கில் நடைபெறுகிறது.
இந்த தேர்வில் 2005-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதிக்குப் பின்னர் பிறந்தவர்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும்.
பங்கேற்கும் வீரர்கள் பிறப்புச் சான்றிதழ் நகலுடன் நேரில் பங்கேற்கலாம் என்று கடலூர் மாவட்ட கூடைப்பந்து கழகத்தின் மாவட்டத் தலைவர் பி.எம்.ஜெ.இளங்கோவன் தெரிவித்தார்.