வடலூர், கருங்குழி ஏரிஸ் மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் சாலைப் பாதுகாப்பு வார விழா அண்மையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் எஸ்.தியாகராஜன் தலைமை வகித்தார். தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் ஜி.கணேசன் முன்னிலை வகித்தார். வடலூர் காவல் ஆய்வாளர் க.அம்பேத்கார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினார்.
பின்னர், சாலைப் பாதுகாப்பு குறித்த வினாக்களுக்கு விடையளித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. போக்குவரத்துக் காவல் உதவி ஆய்வாளர் ஆர்.வெங்கடேசன், கே.தனசேகரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். நிகழ்ச்சியை நாட்டு நலப்பணித் திட்டம், இளைஞர் செஞ்சிலுவை சங்கம், குடிமக்கள் நுகர்வோர் மன்ற மாணவர்கள் இணைந்து நடத்தினர்.
நிகழ்ச்சியில் பேராசிரியர்கள், மாணவர்கள், அலுவலர்கள், ஓட்டுநர்கள் கலந்துகொண்டனர். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஆர்.வேல்முருகன் நன்றி கூறினார்.