உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி
காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த 40-க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு கடலூரில் அனைத்து குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி சனிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.
தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கூட்டமைப்புத் தலைவர் பி.வெங்கடேசன், துணைப் பொதுச் செயலர் டி.புருஷோத்தமன், நிர்வாகிகள் ஆதவன், இளங்கோவன், கிருஷ்ணமூர்த்தி, காசிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மௌன அஞ்சலி: கடலூர் மாவட்ட சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் வாரிசுகள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் கடலூர் நேரு பவனில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு, சுதந்திரப் போராட்ட தியாகிகளும், அவர்களது வாரிசுகளும் மெழுகுவர்த்தி ஏந்தி மெளன அஞ்சலி செலுத்தினர். சங்கத்தின் பொதுச் செயலர் விஜயலட்சுமி, தியாகிகள் ஏகாம்பரம், காரையூசுப், துணைத் தலைவர் சாந்திவரதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்க மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் தெரிவித்தனர்.