வடலூரை புனித தலமாக அறிவிக்கக் கோரி மனு

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில், இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவர் ஆர்.எஸ்.தேவா தலைமையில் அந்தக் கட்சியினர் வள்ளலார் வேடம்

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில், இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவர் ஆர்.எஸ்.தேவா தலைமையில் அந்தக் கட்சியினர் வள்ளலார் வேடம் அணிந்தும், அவரது திருஉருவப் படத்தை கையில் ஏந்தியும் வந்து மனு அளித்தனர். 

அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: வடலூரில் வள்ளலாரின் சத்திய ஞான திருச்சபை அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் இந்தத் திருத்தலத்தை அரசு புனித தலமாக அறிவிக்க வேண்டும்  என மனுவில் வலியுறுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com