வயலில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த பெண் மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்தார்.
விருத்தாசலம் அருகே உள்ள தொழூர் கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி மனைவி சரோஜா (55). இவர், திங்கள்கிழமை இரவு தனது வீட்டுக்கு பின்புறமுள்ள வயல்வெளிக்குச் சென்றார். அப்போது அங்கு அறுந்து கிடந்த மின் கம்பியை தெரியாமல் மிதித்ததாகத் தெரிகிறது. இதில், மின்சாரம் பாய்ந்ததில் சரோஜா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
வெளியே சென்ற சரோஜாவைக் காணவில்லை என அவரது உறவினர்கள் தேடிய நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை வயல்வெளியில் இறந்து கிடந்ததை பாத்தனர். இதுதொடர்பாக கருவேப்பிலங்குறிச்சி போலீஸார் வழக்குப் பதிவுசெய்து, சரோஜாவின் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விசாரணை நடத்தி வருகின்றனர்.