பண்ருட்டி காவல் சரகத்தின் புதிய காவல் துணைக் கண்காணிப்பாளராக கோ.நாகராஜன் பொறுப்பேற்றார்.
காஞ்சிபுரத்தில் கியூ பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்த இவர், பணியிட மாறுதலில் பண்ருட்டி காவல் துணைக் கண்காணிப்பாளாராகப் பொறுப்பேற்றார்.
பண்ருட்டி காவல் துணைக் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்த சுந்தரவடிவேல் பணி ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, நாகராஜன் அந்தப் பணியில் நியமிக்கப்பட்டார்.