மத்திய கூட்டுறவு வங்கித் தேர்தல்: வேட்புமனு தாக்கலில் ஆர்வமில்லை

கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய யாரும் முன்வரவில்லை.


கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய யாரும் முன்வரவில்லை.
கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் 21 நிர்வாகக்குழு உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் மற்றும் கடலூர் மாவட்ட சரவணபவா கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் 21 நிர்வாகக்குழு உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகளை கூட்டுறவு சங்கங்களின் சரக துணைப் பதிவாளர் மேற்கொண்டார். இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு 22-ஆம் தேதி வேட்புமனுத் தாக்கலும், 23-ஆம் தேதி மனுக்கள் பரிசீலனையும், 25-ஆம் தேதி வேட்பாளர் இறுதிப் பட்டியலும், தேவைப்பட்டால் மார்ச் 1-ஆம் தேதி தேர்தலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தத் தேர்தலில், சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் மட்டுமே போட்டியிட முடியும். 
பெரும்பாலான உறுப்பினர்கள் அதிமுகவைச் சேர்ந்தவர்களாக இருந்தபோதிலும் வெள்ளிக்கிழமை யாரும் வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை. இதனால், புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மீண்டும் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்படுமென கூட்டுறவுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com