பேரூராட்சிப் பணியாளர்களுக்கு புத்தாடைகள் விநியோகம்

சிதம்பரம் அருகே உள்ள அண்ணாமலைநகர் பேரூராட்சி நிர்வகத்தின் கீழ் பணியாற்றும் ஊழியர்களுக்கு பொங்கல் விழாவை முன்னிட்டு புத்தாடைகள் வழங்கும் நிகழ்ச்சி பேரூராட்சி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

சிதம்பரம் அருகே உள்ள அண்ணாமலைநகர் பேரூராட்சி நிர்வகத்தின் கீழ் பணியாற்றும் ஊழியர்களுக்கு பொங்கல் விழாவை முன்னிட்டு புத்தாடைகள் வழங்கும் நிகழ்ச்சி பேரூராட்சி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
 நிகழ்ச்சியில் சிதம்பரம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் பங்கேற்று பேரூராட்சி பணியாளர்கள், ஊழியர்களுக்கு புத்தாடைகளை வழங்கினார். பரங்கிப்பேட்டை ஒன்றிய அவைத் தலைவர் ராசாங்கம், மாவட்ட இளைஞரணி செயலர் முருகையன், ஜெயசீலன், அண்ணாமலைநகர் நிர்வாகிகள் உத்திராபதி, ஆறுமுகம், தங்ககோபால், சேகர், கணபதி, ரகு, கோபால், கிருஷ்ணமூர்த்தி, கணேசன், ரவி, சரவணன், திருமூர்த்தி, ஆனந்த், உத்திராபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com