சிதம்பரம் சி.பொன்னம்பலம் நகரைச் சேர்ந்த சபாநாயகம் (85), புவனகிரி பெரியதேவாங்கர் தெருவைச் சேர்ந்த டி.பி.காசிநாதன் செட்டியார் (84) ஆகியோர் காலமானர்கள். இவர்களது இருஜோடி கண்கள் சிதம்பரம் தன்னார்வ ரத்த தானக் கழகம் சார்பில் தானமாக பெறப்பட்டு புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இதற்கான ஏற்பாடுகளை ரத்த தானக் கழகத் தலைவர் எஸ்.ராமச்சந்திரன், சிதம்பரம் அரிமா சங்க நிர்வாகிகள் சிதம்பரராஜா, விவேகன், சர்வேஷ், சண்முகசுந்தரம், நடராஜன், புவனகிரி அரிமா சங்க நிர்வாகிகள் ரகுராமன், அருண்குமார், ராம்குமார், ஏசிபி.ரத்தினசுப்பிரமணியன் ஆகியோர் செய்திருந்தனர்.