காட்டுமன்னார்கோவிலில் உள்ள எம்.ஆர்.கே. பாலிடெக்னிக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முகாமில் சென்னை வேல்சிட்டி கன்சல்டிங் இன்ஜினியரிங் நிறுவன மனித வள மேம்பாட்டுத் துறை அதிகாரி பி.உதயக்குமார் பங்கேற்று மாணவர்களிடையே நேர்காணலை நடத்தினார். வேலைவாய்ப்பு முகாமில் கட்டடவியல் துறை மாணவர்கள் 10 பேர் கலந்து கொண்டனர். இவர்களில் 7 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு பெற்ற மாணவர்களுக்கு கல்லூரி தலைவர் எம்ஆர்.கே.பி.கதிரவன் வாழ்த்துக்களை தெரிவித்தார். முகாமில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது
(படம்) . கல்லூரி முதல்வர் ஆர்.வெங்கடேசன், துணை முதல்வர் ந.அறிவழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.