புதுச்சேரி துணை நிலை ஆளுநர் காணொலி மூலம் காரைக்கால் மக்களிடம் வெள்ளிக்கிழமை குறைகளைக் கேட்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஆர். கேசவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுச்சேரி துணை நிலை ஆளுநர், காரைக்கால் மாவட்ட மக்களிடம் காணொலி மூலம் குறைகள் கேட்டறியும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (நவ. 16) மாலை 5 முதல் 6 மணி வரை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள அரங்கில் நடைபெறவுள்ளது. குறைகள் தெரிவிக்க விரும்புவோர், வெள்ளிக்கிழமை காலை 10 முதல் மாலை 3 மணி வரை ஆட்சியர் அலுவலகத்தில் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். புகார்களை எழுத்து வடிவில் தர வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.