கஜா புயல் கரையை கடக்கும்போது பாதிக்கப்படும் மக்களுக்கு காங்கிரஸ் கட்சியினர் உதவ வேண்டும் என்று பிரதேச காங்கிரஸ் தலைவரும், பொதுப்பணித் துறை அமைச்சருமான ஆ.நமச்சிவாயம் வேண்டுகோள் விடுத்தார்.
இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புதுவை மற்றும் தமிழகத்தை நெருங்கி வரும் கஜா புயலை எதிர்கொள்ள காங்கிரஸ் அரசு அனைத்துவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது.
அதேநேரம், புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள், அனைத்துப் பிரிவு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் புயல் கரையைக் கடக்கும்போது ஏற்படும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு உடனடியாக உதவி செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார் நமச்சிவாயம்.