புதுச்சேரி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் வைத்து வழிபாடு நடத்தப்பட்ட விநாயகர் சிலைகள் திங்கள்கிழமை கடலில் கரைக்கப்பட்டன.
புதுச்சேரி விநாயகர் சதுர்த்தி விழா பேரவை சார்பில் 126 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. புதுச்சேரி நகரப் பகுதியில் வைத்து வழிபட்ட 53 சிலைகள் புதுச்சேரி கடலில் கரைக்கப்பட்டன. மேலும், பிற சிலைகள் நல்லவாடி, காலாப்பட்டு பகுதி கடலில் கரைக்கப்பட்டன.
வில்லியனூர் பகுதியில் வைக்கப்பட்டிருந்த சிலைகள் சாரங்கபாணி ஆற்றில் கரைக்கப்பட்டன. முன்னதாக சரக்கு வாகனங்களில் சிலைகள் பலத்த பாதுகாப்புடன் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. இந்து முன்னணி மற்றும் பாஜக நிர்வாகிகள் தலைமையில் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.