தூய்மையே சேவை கையெழுத்து இயக்கம்

காரைக்காலில் தூய்மையே  சேவை என்ற திட்டத்தின் கீழ் கையெழுத்து இயக்கம் மற்றும் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காரைக்காலில் தூய்மையே  சேவை என்ற திட்டத்தின் கீழ் கையெழுத்து இயக்கம் மற்றும் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
செப்.15 முதல் அக்.2 வரை ஸ்வச்சாத ஹை சேவா என்கிற தூய்மையே சேவை என்கிற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. பல்வேறு அமைப்புகள், நிறுவனங்கள், அரசுத் துறையினர் உள்ளிட்டோர் தூய்மைப் பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு வருகின்றனர்.
 இதன் ஒரு பகுதியாக மக்களிடையே தூய்மையே  சேவை என்கிற விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கையெழுத்து இயக்கம் மற்றும் சைக்கிள் பேரணி மாவட்ட ஆட்சியரகப் பகுதியில் நடத்தப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் ஆர்.கேசவன், முதல் கையெழுத்திட்டு  இயக்கத்தை தொடங்கிவைத்தார். இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பேரணியையும் அவர் கொடியசைத்துத் தொடங்கிவைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் எஸ்.சுபாஷ் மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் நிறுவன பசுமை நண்பர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com