நவீன காலத்துக்கு ஏற்ப புதுவிதமான களிமண் பொம்மைகள் தயாரிக்க புதுச்சேரியில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வெள்ளிக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.
புதுச்சேரி கணுவாப்பேட்டை கிராமத்தில் ஐந்நூறு ஆண்டுகளுக்கும் பழைமையான களிமண் பொம்மைகள் தயாரிக்கும் பணியில் கைவினைக் கலைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர். நலிந்து வரும் இந்தத் தொழிலைப் பாதுகாக்கும் பொருட்டு, சென்னை நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி இறுதியாண்டு மாணவர்கள், கைவினைக் கலைஞர்கள் இணைந்து சிறப்பு பயிற்சிமுகாமில் ஈடுபட்டனர்.
முகாமில் நவீன காலத்துக்கு ஏற்ப வர்த்தகத்துக்கு உகந்த புதிய விதமான களிமண் பொம்மைகளைத் தயாரிக்க பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பயிற்சி முகாமில் தேசிய விருதாளர் முனுசாமி, ஆடை அலங்காரத் தொழில்நுட்பப் படிப்பு பயிலும் இறுதியாண்டு மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளித்தார்.