புதுப்பிக்கப்பட்ட புனித ஜெபமாலை அன்னை ஆலயம் திறப்பு

புதுச்சேரி முத்தியால்பேட்டையில் புதுப்பிக்கப்பட்ட புனித ஜெபமாலை அன்னை ஆலயம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.


புதுச்சேரி முத்தியால்பேட்டையில் புதுப்பிக்கப்பட்ட புனித ஜெபமாலை அன்னை ஆலயம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.
முத்தியால்பேட்டை ரொசாரியோ வீதியில் 154 ஆண்டு பழைமையான புனித ஜெபமாலை அன்னை ஆலயம் புதுப்பிக்கப்பட்டது. புதுச்சேரி - கடலுôர் உயர் மறை மாவட்ட பேராயர் அந்தோணி ஆனந்தராயர் புதுப்பிக்கப்பட்ட ஆலயத்தில் அமைக்கப்பட்ட கல்வெட்டைத் திறந்துவைத்து திருநிலைப்படுத்தினார்.
இதைத் தொடர்ந்து, ஆடம்பரக் கூட்டுத் திருப்பலியுடன் சிறப்பு ஆசி வழங்கப்பட்டது. ஆலய திறப்பு விழாவில் பங்கேற்ற விருந்தினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களை பேராயர் கெளரவப்படுத்தி சிறப்புரையாற்றினார்.
விழாவில் பங்கு தந்தைகள், உயர் மறைமாவட்ட அருள்பணியாளர்கள், கன்னியாஸ்திரிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை ஆலய பங்குத் தந்தை அகஸ்தே, பள்ளி முதல்வர்கள், திருப்பணிக் குழு, பங்கு பேரவையின் பங்கு மக்கள் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com