புதுச்சேரி முத்தியால்பேட்டையில் செப். 25-ஆம் தேதி குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும்.
இதுகுறித்து புதுவை பொதுப்பணித் துறை சுகாதாரக் கோட்டச் செயற்பொறியாளர் கன்னியப்பன் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புதுச்சேரி காட்டாமணிக்குப்பம் கீழ்நிலை நீர்தேக்கத் தொட்டியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவிருப்பதால்,
செப். 25-ஆம் தேதி மதியம் 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையில், முத்தியால்பேட்டை, தெபேசன் பேட்டை, புனித சிமோன் பேட்டை, சுந்தர விநாயகர் பேட்டை, சவுக்குபேட்டை, பெருமாள்பேட்டை, சோலை நகர், லூர்து நகர், விஸ்வநாதன் நகர், ராமகிருஷ்ணா நகர், கணபதி நகர், அங்காளம்மன் நகர், அன்னை சத்தியா நகர், வ.உ.சி., நகர், கணேஷ் நகர், ஸ்டாலின் நகர், அம்பேத்கர் நகர், அம்பலவாணர் நகர், ராமலிங்க நகர், காட்டாமணிக்குப்பம், வைத்திக்குப்பம், குருசுக்குப்பம், மாணிக்க முதலியார்தோட்டம், பட்டினத்தார் தோட்டம், சப்தகிரி கார்டன், தனலஷ்மி கார்டன், ஆரோக்கிய நாதன் கார்டன், லஷ்மி கார்டன், எம்.ஜி.,ரோடு, பாரதிதாசன் மகளிர் கல்லூரி வரை உள்ள பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைபடும் என அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.