மின்துறை இளநிலைப் பொறியாளர் காலிப்பணியிடங்களை நிரப்பவது தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் அந்தத் துறையின் அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினார்.
சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் லாஸ்பேட்டையில் துணை மின்நிலையம் அமைக்க எடுக்கப்பட்டு வரும் பணிகள், பிள்ளைத் தெருவாசல் தானியங்கி துணை மின்நிலையம் அமைத்தல், இளநிலைப் பொறியாளர் காலிப் பணியிடங்களை நிரப்புதல், மின் நுகர்வோருக்கு ரசீது வழங்குவதில் உள்ள குறைபாடுகள், மின் ரசீது மென்பொருளை தரம் உயர்த்துதல் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
கூட்டத்தில் மின்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.