புதுச்சேரி

பெண் தற்கொலை: அழுகிய நிலையில் சடலம் மீட்பு

DIN

புதுச்சேரி அருகே வீட்டில் தற்கொலை செய்த பெண்ணின் சடலம்  அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. 
கன்னியாகுமாரி மாவட்டம், நாகர்கோவிலைச் சேர்ந்தவர் ராஜேஷ் (30). கடந்த 2009 ஆம் ஆண்டு புதுச்சேரிக்கு வந்த இவர், அரும்பார்த்தபுரத்தைச் சேர்ந்த ஜெயசுதாவை (28) காதலித்து, அதே ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.
ராஜேஷ் அரும்பார்த்தபுரத்தில் உள்ள ஒரு கட்டடத்தின் முதல் மாடியில் தையல் கடையும், இரண்டாவது மாடியில் வீடும் எடுத்து மனைவியுடன் வசித்து வந்தார்.  கடன் தொல்லையால் ராஜேஷ் மதுப்பழக்கத்துக்கு அடிமையானார். 
இந்த நிலையில், கடந்த 14 ஆம் தேதி கடன் கொடுத்தவர்கள் வீட்டுக்கு வந்து ராஜேஷிடம் வாக்குவாதம் செய்தனர். இதனால் தம்பதி இடையே தகராறு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ராஜேஷ் மது அருந்தச் சென்றுவிட்டார்.
கணவரின் மது ஆர்வத்தால் ஆத்திரமடைந்த மனைவி ஜெயசுதா, வீட்டின் கதவை உள்புறமாக தாழிட்டு, ஓர் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. அதன்பின்னர், மதுபோதையில் வீட்டுக்கு வந்த ராஜேஷ், மனைவி கோபம் காரணமாகவே கதவை திறக்கவில்லை என்று நினைத்து இருந்துவிட்டார்.
இந்நிலையில் 4 ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை ராஜேஷ் வீட்டின் ஜன்னல் கதவை உடைத்து பார்த்த போது, மனைவி ஜெயசுதா தூக்கில் சடலமாகத் தொங்குவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். 
இதுதொடர்பாக தகவலறிந்து அங்கு வந்த வில்லியனூர் போலீஸார், கதவை உடைத்து உள்ளே சென்று, அழுகிய நிலையில் துர்நாற்றம் வீசியபடி கிடந்த ஜெயசுதாவின் உடலை மீட்டு, வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

SCROLL FOR NEXT