மக்கள் நீதி மய்யத்தின் 2-ஆம் ஆண்டு தொடக்க விழா

மக்கள் நீதி மய்யத்தின் 2-ஆம் ஆண்டு தொடக்க விழா புதுச்சேரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

மக்கள் நீதி மய்யத்தின் 2-ஆம் ஆண்டு தொடக்க விழா புதுச்சேரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரி கந்தப்பா வீதியில் உள்ள மாநிலத் தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்ட விழாவுக்கு கட்சியின் புதுவை மாநிலத் தலைவர் எம்.ஏ.எஸ்.சுப்ரமணியன் தலைமை வகித்து, கட்சிக் கொடியேற்றி இனிப்புகளை வழங்கினார்.
பின்னர், நிர்வாகிகள் கந்தப்பா வீதியில் இருந்து பாரதி வீதி,  புஸ்ஸி வீதி வழியாக அண்ணா சிலைக்கு ஊர்வலமாகச் சென்று பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கிக் கொண்டாடினர்.
நிகழ்வில் கட்சியின் பொதுச் செயலர் ராஜன், இணை பொதுச் செயலர் முருகேசன், பொருளாளர் தாமோ.தமிழரசன், செயலர்கள் அரிகிருஷ்ணன், நிர்மலா சுந்தரமூர்த்தி, ராம.ஐயப்பன், சந்திரமோகன்,  பிராங்கிளின் பிரான்சுவா, ஆனந்த், ஜெயலட்சுமி, நற்பணி இயக்க நிர்வாகிகள் கமல்ராஜ், பசுபதி, ராஜேந்திரன், கமல்லோகு, பழனி, குமார், பிரபு, 
தீபா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com