புதுச்சேரியில் தட்டச்சு தேர்வு தொடக்கம்: 2,650 பேர் பங்கேற்பு

புதுச்சேரியில் இரண்டு மையங்களில் சனிக்கிழமை தொடங்கிய தட்டச்சுத் தேர்வில் 2, 650 பேர் பங்கேற்றனர்.


புதுச்சேரியில் இரண்டு மையங்களில் சனிக்கிழமை தொடங்கிய தட்டச்சுத் தேர்வில் 2, 650 பேர் பங்கேற்றனர்.
 தமிழக அரசின் தொழில்நுட்ப கல்வித் துறை சார்பில் தமிழகம், புதுவையில் தட்டச்சு தேர்வு பிப்.23, 24 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.  அதன்படி,  புதுச்சேரியில் மோதிலால் நேரு அரசு பாலிடெக்னிக் கல்லூரி, லாஸ்பேட்டை அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி ஆகிய 2 மையங்களில் தட்டச்சு தேர்வு சனிக்கிழமை தொடங்கியது.  முதல் நாளான சனிக்கிழமை தட்டச்சு தமிழ் மற்றும் ஆங்கிலம் இளநிலை 4 அணிகளுக்கும், தட்டச்சு தமிழ் மற்றும் ஆங்கிலம் முதுநிலை ஒரு அணிக்கும் தேர்வு நடைபெற்றது.   இவ்விரு மையங்களிலும் நடைபெற்ற தேர்வில் மொத்தம் 2,650 பேர் கலந்து கொண்டனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com