மின் கம்பங்களை பயன்படுத்திக் கொள்ள விண்ணப்பிக்க அழைப்பு

மின் கம்பங்களை பயன்படுத்திக்கொள்ள உரிய அமைப்பினர் விண்ணப்பிக்கலாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மின் கம்பங்களை பயன்படுத்திக்கொள்ள உரிய அமைப்பினர் விண்ணப்பிக்கலாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் மின் துறை செயற்பொறியாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
மின் துறையின் மின் கம்பங்களை, கேபிள் டி.வி. மற்றும் அகண்ட அலைவரிசை வயர்களை எடுத்துச் செல்வதற்கும், விளம்பர பலகைகளை பொருத்திக்கொள்வதற்கும் புதுச்சேரி அரசு அண்மையில் கட்டண அடிப்படையில் அனுமதியளித்துள்ளது. இந்த திட்டம் குறித்த தகவல்கள் இத்துறையின் இணையதளம்  பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 
எனவே, அனைத்து கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் மற்றும் விளம்பர நிறுவனத்தினர் அதற்குரிய விண்ணப்பத்துடன் மின்துறையின் உரிய அலுவலர்களை அணுகி, செயல்களை முறைப்படி செயல் படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என அதில்கூறப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com