நிர்வாகிகள் பதவியேற்பு

புதுவை பொதுப் பணித் துறை ஊழியர்கள் கூட்டுறவு சங்கத்தின் புதிய நிர்வாகிகள் சனிக்கிழமை பதவியேற்றுக் கொண்டனர். 

புதுவை பொதுப் பணித் துறை ஊழியர்கள் கூட்டுறவு சங்கத்தின் புதிய நிர்வாகிகள் சனிக்கிழமை பதவியேற்றுக் கொண்டனர். 
இதற்கான விழா புதுச்சேரி பெத்தி செமினார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. பொதுப் பணித் துறை ஊழியர்கள் சங்கத்துக்கான 1.1.2019 அன்று முதல் 30.6.2021வரையிலான காலத்துக்கு புதிய நிர்வாகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்,  கடந்த டிச. 23-ஆம் தேதி பெத்தி செமினார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. 
 இந்தத் தேர்தலில், தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகக் குழுச் உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்டனர். 
அதன்படி, சங்கத் தலைவராக கருணாகரன்,  துணைத் தலைவராக ரவி,  இயக்குநர்களாக முருகன்,  புஷ்பநாதன்,  பிரிட்டோ ராஜன்,  மலையான்,  செல்வகுமார்,  ராமன்,  பச்சையப்பன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com