சிறுவந்தாடு கிராமத்தில் காச நோய் விழிப்புணர்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
விழுப்புரம் வட்டம், சிறுவந்தாடு பகுதியில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மாவட்ட காசநோய்ப் பிரிவு சார்பில் அந்தக் கிராமத்தில் கர்ப்பிணிகள், பொது மக்களுக்கு காசநோய் விழிப்புணர்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட காச நோய்ப் பிரிவு துணை இயக்குநர் சுதாகர் பங்கேற்று, காசநோய் தடுப்பு முறை குறித்து பேசினார். இந்த நோய்க்கு அரசு மருத்துவமனைகளில் அளிக்கப்படும் இலவச மருத்துவ சிகிச்சை, காச நோயாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்குவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். நிகழ்ச்சியில், பொது மக்கள், மருத்துவ ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர்.