திருக்கோவிலூர் அருகே 16 வயது சிறுமிக்கு நடக்கவிருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
திருக்கோவிலூரை அடுத்த சு.கொல்லூர் கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த இளையபாபுவுக்கும் (21) புதன்கிழமை அரகண்டநல்லூரில் திருமணம் நடைபெற இருந்தது.
இதுகுறித்து தகவலறிந்த சமூக நலத் துறையினர் போலீஸார் உதவியுடன் சென்று திருமணத்தைத் தடுத்து நிறுத்தி, சிறுமிக்கு ஆலோசனைகளை வழங்கினர். இதுகுறித்து போலீஸார் தொடர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அலங்கார வாகனத்தில் நகர்ப் பகுதியில் பெண் அழைப்பு விமரிசையாக நடத்தப்பட்டு, மண்டபத்தில் இரவு உணவு உபசரிப்பு முடிந்த நிலையில், திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது பெரும்
பரபரப்பை ஏற்படுத்தியது.