அரகண்டநல்லூரில் காங்கிரஸ் கட்சி சார்பில், ஜவாஹர்லால் நேரு பிறந்த நாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு கட்சியின் சிறுபான்மைப் பிரிவு மாநில துணைத் தலைவரும், அரகண்டநல்லூர் முன்னாள் பேரூராட்சித் தலைவருமான ஏ.ஆர்.வாசிம்ராஜா தலைமை வகித்து, நேரு படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் கே.வி.முருகன், மாவட்ட பொதுச் செயலர்கள் தாயுமானவர், விளந்தை அ.சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரத் தலைவர் ஹெச்.சாதுல்லாகான் வரவேற்றார். வட்டாரத் தலைவர் எம்.ஆர்.சேட்டு, வட்ட துணைத் தலைவர் மகாலிங்கம், கொல்லூர் விஜயகுமார், வசந்தகிருஷ்ணாபுரம் வெள்ளையங்கிரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.