மேல்மலையனூர் அருகேயுள்ள அவலூர்பேட்டை சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் கார்த்திகை முதல் சோமவாரத்தை முன்னிட்டு திங்கள்கிழமை சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
இரவு 7 மணிக்கு சிவனுக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம், அர்ச்சனைகள் செய்து, சிவபுராணம், துதிப்பாடல்கள், சிவ நாமவளிகளை இசையுடன் பாடிய பிறகு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.