கள்ளக்குறிச்சியில் அஞ்சல் துறை சார்பில் நெகிழிப் பை ஒழிப்பு மற்றும் தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வு ஊர்வலம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி தலைமை அஞ்சலக வளாகம் முன்பிருந்து ஊர்வலத்தை விருத்தாசலம் அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் செ.பெரியசாமி தொடக்கி வைத்தார். உதவி கண்காணிப்பாளர் முரளிதரன் வரவேற்றார். ஊர்வலத்தில் அஞ்சல்துறை ஊழியர்கள் பலரும் கலந்துகொண்டு பதாகைகளை ஏந்தியவாறு நகரின் முக்கிய வீதிகள் வழியாக விழிப்புணர்வு ஏற்படுத்தியபடி சென்றனர் .