மது விலக்கு சோதனை: 117 பேர் கைது

விழுப்புரம் மாவட்டத்தில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட மது விலக்கு தீவிர சோதனையில் 118 வழக்குகளின் கீழ் 117 பேர் கைது செய்யப்பட்டனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட மது விலக்கு தீவிர சோதனையில் 118 வழக்குகளின் கீழ் 117 பேர் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் மது கடத்தல், கள்ளச்சாராயம் காய்ச்சுதல், சாராயம் விற்பனை போன்றவற்றைத் தடுக்க போலீஸார் அண்மையில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அதில், 2,400 லிட்டர் சாராய ஊறல்கள், 900 லிட்டர் எரிசாராயம், 290 லிட்டர் சாராயம், 1,000 புதுச்சேரி மதுப் புட்டிகள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார், 2 இரு சக்கர வாகனங்கள் ஆகியவை 
பறிமுதல் செய்யப்பட்டன.   இது தொடர்பாக 118 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 22 பெண்கள் உள்பட 117 பேரை போலீஸார் கைது செய்தனர். 
போதைப் பாக்கு விற்பனை, சாலையோரத்தை ஆக்கிரமித்து கடை வைத்தல் போன்றவை காரணமாக 57 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்டக் காவல்துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com