கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம் வட்டங்களைச் சார்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர சிறப்பு முகாம் கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சார் - ஆட்சியர் (பொ) க.இளங்கோவன் தலைமை வகித்தார். முடநீக்கியல் வல்லுநர் கே.கண்ணன், தனி வட்டாட்சியர்கள் எஸ்.சையத்காதர், எஸ்.பாலசுப்பிரமணியன், த.ராஜராஜன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். சார் - ஆட்சியரின் நேர்முக உதவியாளர் க.வெங்கடேசன் வரவேற்றார்.முகாமில் 84 பேரிடம் மனுக்கள் பெறப்பட்டன. கடந்த மாதம் பெறப்பட்ட மனுக்களை ஆய்வு செய்து தகுதியுடைய 15 பேருக்கு உதவித் தொகை பெறுவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டன.