விழுப்புரத்தில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
விழுப்புரம் பீமநாயக்கன் தோப்பு நகராட்சி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் நிர்வாகிகள் தேர்வு சனிக்கிழமை நடைபெற்றது.
மாநில பொருளாளர் எஸ்.செல்லையா தேர்தல் அலுவலராகப் பொறுப்பேற்றார். அங்கு நடைபெற்ற நிர்வாகிகள் தேர்தலில் சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டு வாக்களித்தனர்.
நிறைவாக, புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதன்படி, விழுப்புரம் மாவட்டத் தலைவராக வி.முருகன், செயலாளராக எஸ்.நாராயணன், பொருளாளராக கே.செந்தில்குமார், துணைச் செயலராக டி.பிரபாகரன், ஆர்.கோகிலா, திருமலைச் செல்வன், உஷா, மகளிரணிச் செயலராக இந்திரா உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.
மாநில செயற்குழு உறுப்பினர்களாக பி.அன்பழகன், ஆர்.செல்வதுரை, குருமூர்த்தி, அரிதாஸ் உள்ளிட்டோரும் தேர்வாகினர். புதிய நிர்வாகிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.