விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அருகே உள்ள சு.கொல்லூர் கிராமத்தைச் சேர்ந்த க.கண்ணன் (71) செப்.18 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) உடல்நலக் குறைவால் காலமானார்.
இவர், அரகண்டநல்லூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் முன்னாள் மேற்பார்வையாளர். இவரது மனைவி ஜெயகாந்தம் கடந்தாண்டு காலமானார். இவர்களுக்கு வசந்தி (46) என்ற மகளும், "தினமணி' திருக்கோவிலூர் பகுதி நேரச் செய்தியாளர் சத்தியமூர்த்தி (43), முருகன் (40), ராமதாஸ் (34), சக்திவேல் (31) ஆகிய மகன்களும் உள்ளனர். அவரது உடல் சொந்த ஊரான சு.கொல்லூர் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை மாலை தகனம் செய்யப்பட்டது. தொடர்புக்கு 99423 46222.