கள்ளக்குறிச்சி அருகே செவ்வாய்க்கிழமை இரவு சைக்கிள் மீது லாரி மோதியதில் முதியவர் உயிரிழந்தார்.
கள்ளக்குறிச்சியை அடுத்த தியாகதுருகம் ஜின்னா நகரைச் சேர்ந்தவர் யாசின்கான் (50). இவர், செவ்வாய்க்கிழமை இரவு அவரது தம்பியின் சைக்கிள் கடையில் வேலை செய்துவிட்டு வீட்டுக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, உளுந்தூர்பேட்டை பகுதியில் இருந்து கலையநல்லூர் சர்க்கரை ஆலைக்குச் சென்ற லாரி, யாசின்கானின் சைக்கிள் மீது மோதியதாகத் தெரிகிறது. இதனால் பலத்த காயமடைந்த அவர், நிகழ்விடத்திலேயே உயிரிந்தார். தகவலறிந்த தியாகதுருகம் போலீஸார், யாசின்கானின் சடலத்தை மீட்டு, உடல்கூறு பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திவிட்டு
தலைமறைவான லாரி ஓட்டுநரைத் தேடி வருகின்றனர்.